Lalitha Sahasranamam - Tamil with meanings - Navaratri Parayan - Day 1-- 1 to 112 names of Maa Lalithambika


சீர்மிகு லலிதா திருப்பெயர் ஆயிரம்:

இந்தத் தமிழாக்கம் புலவர் .சுப்பிரமணிய சிவம் அவர்களால் இயற்றப் பட்டது.

துதிப் பகுதி:

திரு வினாயகர் துதி: (சுக்லாம்------சாந்தயே)

சு(h)க்லாம்ப(4)ரத(4)ரம் விஷ்ணும்
(h)சி(h)வர்ணம் சதுர்பு(4)ஜம்
ப்ரஸன்ன வத(3)னம் த்(4)யாயேத்
ஸர்வ விக்(4)னோப சா(h)ந்தயே

1.     சீர்மிகு லலிதா திருப்பெயர் ஆயிரம்:

போற்றிகள்:

1 ஓம் ஸ்ரீமாத்ரே நம;
ஓம் சீர்மிகு அன்னையே போற்றி

2 ஓம் ஸ்ரீ மஹாராஞ்யை நம:
ஓம் திருமலி பேரரசியே போற்றி

3 ஓம் ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்(h)வர்யை நம:
ஓம் ஏருறு சிங்காசனத் துறை தலைவியே போற்றி

4 ஓம் சிதக்(3)னி குண்ட(3) ஸம்பூ(4)தாயை நம:
ஓம் பேரறிவோமப் பெருங்கனல் உதித்தாளே போற்றி

5 ஓமோம் தே(3)வகார்ய-ஸமுத்(4)யதாயை நம:
ஓம் தாருறு தேவர்க்குச் செயல்பட முனைவோளே போற்றி

6 ஓம் உத்(4)யத் பா(4)னு-ஸஹஸ்ரா[பா(4)யை நம:
ஓம் உதிக்கும் செங்கதிர் ஆயிரம் ஒப்பாளே போற்றி

7 ஓம் சதுர்பா(3)ஹு-ஸமன்விதாயை நம:
ஓம் விதிக்கும் கரங்கள் நான்கினை உடையாளே போற்றி

8 ஓம் ராக(3)ஸ்வரூப-பாசா(h)ட்(4)யாயை நம:
ஓம் பற்றின் உருவத்துப் பாசத்தைக் கொண்டாளே போற்றி 

9 ஓம் க்ரோதா(4)ஙகாராங் குசோ(h)ஜ்ஜ்வலாயை நம:
ஓம் சீற்றமது உருவமாம் அங்குசத் திலங்குவாளே போற்றி

10 ஓம் மனோரூபேக்ஷு கோதண்டாயை நம:
ஓம் மனமெனும் கரும்பினை வில்லாய்க் கொண்டாளே போற்றி


11 ஓம் பஞ்சதன்மாத்ர-ஸாயகாயை நம:
ஓம் குணமுறு பஞ்ச பூதமாம் கணையினாளே போற்றி

12 ஓம் நிஜாருண ப்ரபா(4)பூர-மஜ்ஜத்(3)-ப்(3)ரஹ்மாண்ட மண்டலாயை நம:
ஓம் தன் சிவப்பொளி மூழ்கு சகத்தினை உடையாளே போற்றி

13 ஓம் சம்பகாசோ(h)-புன்னாக(3)-ஸௌக(3)ந்தி(4)கலஸத்கசாயை நம:
ஓம் செம்பகம் அசோகு செழுங்கொன்றை நறுங்குழலி போற்றி

14 ஓம் குருவிந்த(3)-மணிச்(h)ரேணீ-கனத் கோடீர மண்டிதாயை நம:
ஓம் செம்மணி வரியொளி சேர்மௌளி சிரத்தினளே போற்றி

15 ஓம் அஷ்டமீ சந்த்(3) விப்(4)ராஜ-(3)லிகஸ்தல-சோ(h)பி(4)தாயை நம:
ஓம் இன்னொளி எட்டாம் பிறைமதி நெற்றியாளே போற்றி

16 ஓம் முக சந்த்(3)-கலங்காப(4) ம்ருக(3)நாபி(4)-விசே(h)ஷகாயை நம:
ஓம் முகமதிக் கறையெனக் கஸ்தூரிப் பொட்டினாளே போற்றி

17 ஓம் வத(3)னஸ்மர-மாங்கல்ய-க்(3)ருஹதோரண-சில்லிகாயை நம:
ஓம் மதன் திருவாயிலின் தோரணப் புருவத்தாளே போற்றி

18 ஓம் வக்த்ரலக்ஷ்மீ-பரீவாஹ-சலன்மீனாப(4)-லோசனாயை நம:
ஓம் முகத்தழகு வெள்ளத்தே மீனான கண்ணுடையாளே போற்றி

19 ஓம் நவசம்பக-புஷ்பாப(4)-நாஸாத(3)ண்ட-விராஜிதாயை நம:
ஓம் அன்றலர் செம்பகத்து மலர்போல மூக்குடையாளே போற்றி

20 ஓம் தாராகாந்தி -திரஸ்காரி-நாஸாப(4)ரண-பா(4)ஸுராயை நம:
ஓம் விண்மீனின் ஒளியோட்டும் விளங்கு மூக்கணியுடையாளே போற்றி

21 ஓம்கத(3)ம்ப(3_ மஞ்சரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹராயை நம:
ஓம் செவிப்பூவால் மனங்கவரும் கதம்பப் பூங்கொத்துடையாளே போற்றி

22 ஓம் தாடங்க-யுக(3)லீபூ(4)-தபனோடு(3)-மண்ட(3)லாயை நம:
ஓம் இரவி மதிகள் மண்டலத்தோடு இலங்குநல் தோடுடையாளே போற்றி

23 ஓம் பத்(3)மராக(3)-சி(h)லாத(3)ர்ச(h)-பரிபா(4_)வி-கபோலப(4)வே நம:
ஓம் பதுமராக ஒளிதோற்கும் கன்ணாடி கன்னத்தாளே போற்றி

24 ஓம் நவவித்(3)ரும-பி(3)ம்ப(3)ஸ்ரீ-ந்யக்காரி (3)(h)னச்சிதா(3)யை நம:
ஓம் புதுப்பவளம் கொவ்வைகளும் புறங்காட்டும் இதழ்படைத்தாளே போற்றி

25 ஓம் சு(h)த்(3)(4)-வித்(4)யாங்குராகார-த்(3)விஜபங்க்தி-த்(3)வயோஜ்ஜ்வலாயை நம:
ஓம் சுத்த வித்தை முளைகளெனத் தோன்று இருபல்வரிசையினாளே போற்றி 


26 ஓம் கர்பூர வீடிகாமோத(3)-ஸமாகர்ஷ தி(4)(3)ந்தராயை நம:ஓம் தாம்பூல நறுமணத்தைத் தானிழுக்கும் திசையுடையாளே போற்றி

27 ஓம் நிஜஸல்லாப-மாது(4)ர்ய-வினிர்ப(4)ர்த்ஸித-கச்சாயை நம:
ஓம் கலைமகளின் வீணைக்கு மதிப்பழ்த்த இன்னுரையாளே போற்றி

28 ஓம் மந்த(3)ஸ்மித-ப்ரபா(4)பூர-மஜ்ஜத்காமேச(h)-மானஸாயை நம:
ஓம் புன்னகையின் ஒளி மூழ்கு காமேசன் மனம் படைத்தாளே போற்றி

29 ஓம் அனாகலித-சாத்(4)ருச்(h)-சுபு(3)-ஸ்ரீவிராஜிதாயை நம:
ஓம் ஒப்புமையே நினைப்பரிய உயர்மோவாய்க் கட்டழகியே போற்றி

30 ஓம் காமேச(h) (3)த்(3)(4) மாங்கல்ய-ஸூத்ரசோ(ஹ்)பி(4)-கந்த(4)ராயை நம:
ஓம் காமேசன் கட்டிட்ட மங்கலநாண் கழுத்தழகி போற்றி 30

31 ஓம் கனகாங்க(3)(3)-கேயூர-கமனீய-பு(4)ஜான்விதாயை நம:
ஓம் பொன்னங் கதமோடுகேயூரத் தோளழகியே போற்றி

32 ஓம் ரத்னக்(3)ரைவேய-சிந்தாக-லோலமுக்தாபலான்விதாயை நம:
ஓம் செம்மணியின் அட்டிகைசேர் பதக்கத்து முத்துடையாளே போற்றி

33 ஓம் காமேச்(h)வர-ப்ரேமரத்ன-மணிப்ரதிபணஸ்தன்யை நம:
ஓம் காமேசன் மனம் வாங்கும் கலச முலைப் பேரழகி போற்றி

34 ஓம் நாப்(4)யால-வால-ரோமாலி-லதாபல-குசத்(3)வய்யை நம:
ஓம் கொப்புழாம் தோட்டத்துக் கொடிபழுத்த குவிமுலையாளே போற்றி

35 ஓம் லக்ஷ்யரோமலதா-தா(4)ரதா-ஸமுன்னேய-மத்(4)யமாயை நம:
ஓம் உரோமத்தின் கொடியதனால் உணர்ந்தறியும் மின்னிடையாளே போற்றி 35

36 ஓம் ஸ்தனபா(4)-(3)லன்மத்(4)-பட்டப(3)ந்த(4)-வலித்ரயாயை நம:
ஓம் தனபாரம் தாங்கற்கு அமைந்தனைய மும்மடிப்பை
இனமாகக் கொண்டிட்ட இடையழகு மிக்குடையாளே போற்றி

37 ஓம் அருணாருண-கௌஸும்ப(4)-வஸ்த்ர-பா(40ஸ்வத்-கடீதட்யை நம:
ஓம் செம்மைமிகு பட்டாடை சேர்ந்தொளிரும் நல்லிடையாளே போற்றி

38 ஒம் ரத்ன-கிங்கிணிகாரம்ய--ரச(h)னாதா(3)-பூ(4)ஷிதாயை நம:
ஓம் செம்மணியின் கிங்கிணிகள் ஒலிசெய்யும் மேகலையாளே போற்றி

39 ஓம் காமேச(h)-ஞாத-ஸௌபா(4)க்(3)-மார்த(3()வோருத்(3)வயன்விதாயை நம:
ஓம் காமேசனே அறியும் கவின்மென்மைத் தொடையினாளே போற்றி

40 ஓம் மாணிக்ய-மகுடாகார-ஜானுத்(3)வய-விராஜிதாயை நம:
ஓம் மாணிக்க மகுடமென விளங்குமுழந் தாளினாளே போற்றி 40

41 ஓம் இந்த்(3)ரகோ(3)-பரிக்ஷிப்த-ஸ்மர-தூணாப(4)-ஜங்கி(4)காயை நம;
ஓம் காமனம்புக் கலம்போலும் கவின் மிகுந்த கணைக்காலாளே போற்றி

42 ஓம் கூ(3)(4)கு(3)ல்பாயை நம:
ஓம் மறைந்தழகு வெளிக்காட்டும் மாண்பு கணுக்காலுடையாளே போற்றி

43 ஓம் கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதா(3)ன்விதாயை நம:
ஓம் ஆமையதன் முதுகனைய அழகுபுறப் பாதத்தாளே போற்றி

44 ஓம் நகதீ(3)தி(4)தி-சஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணாயை நம:
ஓம் தாமசமாம் குணம்மறைக்கும் காமர்நக ஒளியுடையாளே போற்றி

45 ஓம் பத(3)த்(3)வய-ப்ரபா(4)ஜால-பராக்ருத-ஸரோருஹாயை நம:
ஓம் தாமரைகள் தோற்றோடும் தகவுடைய திருவடியாளே போற்றி 45

46 ஓம் சி(h)ஞ்சானமணி-மஞ்சீர-மண்டிதஸ்ரீ-பதா(3)ம்பு(3)ஜாயை நம:
ஓம் ஒளிமிகுந்த ரத்தினக்கல் சிலம்பலம்பு சேவடியாளே போற்றி

47 ஓம் மராலீமந்த(3)(3)மனாயை நம:
ஓம் களிய்ன்னப் பேடனைய தளிர் மென்மை நடையினாளே போற்றி

48 ஓம் மஹாலாவண்ய சே(h)வத்(4)யை நம:
ஓம் பேரழகுப் பெட்டகத்தாளே போற்றி

49 ஓம் ஸர்வாருணாயை நம:
ஓம் செம்மையெங்கும் சேர்ந்தொளிர்வாளே போற்றி

50 ஓம் அனவத்(4)யாங்யை நம:
ஓம் ஓர்ந்தாலும் ஓர் குறையும் காணரிய உருவத்தாளே போற்றி 50

51 ஓம் ஸர்வாப(4)ரண பூ(4)ஷிதாயை நம:
ஓம் சீரணிகள் எல்லாமும் சிறப்படையப் பூண்டிட்டாளே போற்றி

52 ஓம் சி(h)வகாமேச்(h)வராங்கஸ்தாயை நம:
ஓம் சிவகாமேசன் திருமடியில் அமர்ந்திடுவாளே போற்றி 

53 ஓம் சி(h)வாயை நம:
ஓம் சிவானியே போற்றி 

54 ஓம் ஸ்வாதீ(4) வல்லபா(4)யை நம:
ஓம் கணவனைத் தன்வயமாய் ஆக்கியவளே போற்றி 

55 ஓம் ஸுமேரு-மத்(4)-ச்(h)ருங்க(3)ஸ்தாயை நம:
ஓம் மேருமலை நடுவுற்ற கொடி முடியாளே போற்றி 55

56 ஓம் ஸ்ரீமன் நக(3) நாயிகாயை நம:
ஓம் சீர் நகர் நாயகியாளே போற்றி

57 ஓம் சிந்தாமணி க்(3)ருஹாந்தஸ்தாயை நம:
ஓம் சிந்தாமணி வீட்டில் வாழ்ந்திடுவாளே போற்றி

58 ஓம் பஞ்சப்(3)ரஹ்மாஸன ஸ்திதாயை நம:
ஓம் ஐந்தென்னும் பிரமங்கள் ஆசனமாய் அமர்ந்திட்டாளே போற்றி

59 ஓம் மஹாபத்(3)மாடவீ ஸம்ஸ்தாயை நம:
ஓம் பெருந்தாமரைக் காடு வாழ்பவளே போற்றி

60 ஓம் கதம்ப(3)வன வாஸின்யை நம:
ஓம் கதம்பப் பெருங்காட்டில் வாழ்பவளே போற்றி 60



  61 ஓம் ஸுதா(4)ஸாக(3) மத்(4)யஸ்தாயை நம:
  ஓம் பேரமுதக் கடல் நடுவே நிலைபெற்றாளே போற்றி

  62 ஓம் காமாக்ஷ்யை நம்:
 ஓம் காமாட்சியே போற்றி

 63 ஓம் காமதா(3)யின்யை நம:
 ஓம் விரும்புவன வழங்கிடுவாளே போற்றி

 64 ஓம் தே(3)வர்ஷிக(3) ஸங்கா(4) ஸ்தூயமானாத்ம வைப(4)வாயை நம:
ஓம் தேவமுனிக் கூட்டங்கள் துதிசெய்யும் சிறப்புடையாளே போற்றி

65 ஓம் (4)ண்டா(3)ஸுர வதோ(4)த்(3)யுகத (h)க்திஸேனா ஸமன்விதாயை நம:
ஓம் பண்டனை அழிக்க முனையும் சக்தி சேனை தனையுடையாளே போற்றி 65

66 ஓம் ஸம்பத்கரீ ஸமாரூட(3) ஸிந்தூ(3)ரவ்ரஜ-ஸேவிதாயை நம:
ஓம் சம்பத்கரி நடத்திடும் நல் கரிப்படையால் சூழுற்றாளே போற்றி

67 ஓம் அச்(h)வாரூடா(4)தி(3)ஷ்டிதாச்(h) கோடிகோடிபி(4) ராவ்ருதாயை நம:
ஓம் அச்வாரூடா செலுத்தும் பல்கோடிப் பரிப்படையாளே போற்றி

68 ஓம் சக்ரராஜ ரதா(2)ரூட(4) மந்த்ரிணீ-பரிஸேவிதாயை நம:
ஓம் சீர்சக்கரதேர் மேவும் படைக்கலன்கள் புடை சூழ்வாளே போற்றி

69 ஓம் கே(3) சக்ர ரதாரூட(4) மந்த்ரிணீ பரிஸேவிதாயை நம:
ஓம் கேயசக்கரத் தேருரும் மந்திரிணி தொழ நிற்பாளே போற்றி

70 ஓம் கி(3)ரிசக்ர ரதா(4)ரூட(4)-(3)ண்ட(4)நாத(2) புரஸ்க்ருதாயை நம:
ஓம் கிரிசக்கரத் தேருடைய தண்டினியை முன்னிட்டாளே போற்றி 70

71 ஓம் ஜ்வாலா மாலினிகா க்ஷிப்த வஹ்னிப்ராகார-மத்(4)யகாயை நம:
ஓம் ஜ்வாலா மலினி வைத்த தீக்கோட்டை நடுவிருப்பாய் போற்றி 

72 ஓம் (4)ண்ட(3) ஸைன்ய வதோ(4)த்(3)யுக்த (h)க்தி விக்ரம ஹர்ஷிதாயை நம:
ஓம் பண்டன்படை அழிக்கவரும் சக்திசேனை திறன்கண்டு மிகமகிழ்வாளே போற்றி 

73 ஓம் நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகாயை நம;
ஓம் நித்தியா தேவிகளின் பெருவீரம் கண்டுவகை மிகவுற்றாளே போற்றி 

74 ஓம் (4)ண்ட((3) புத்ரவதோ(4)த்(3)யுகத-பா(3)லாவிக்ரம நந்தி(3)தாயை நம:
ஓம் பண்டந்தரு மக்கள் தமையழிக்கும் பாலாவின் திறன் மகிழ்வாளே போற்றி 

75 ஓம் மந்த்ரிண்யம்பா(3) விரசித விஷங்க(3)-வத(4)தோஷிதாயை நம:
ஓம் மந்த்ரிணி விசங்களை அழித்தமையால் மகிழ்ந்திடுவாளே போற்றி 

76 ஓம் விசு(h)க்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்தி(3)தாயை நம:
ஓம் விசுக்கிரன் உயிர் போக்கும் தண்டினியைப் புகழ்ந்திடுவாளே போற்றி 

77 காமேச்(h)வரமுகாலோக கல்பித-ஸ்ரீ (3)ணேச்(h)வராயை நம:
ஓம் காமேசன் முகம் பார்த்து கணேசனைத் தோற்றுவித்தாளே போற்றி 

78 ஓம் மஹாக(3)ணேச(h) நிர்பி(4)ன்ன விக்(4) யந்த்ர ப்ரஹர்ஷிதாயை நம:
ஓம் மாகணேசன் உடைத்திட்ட இடர்ப்பொறியால் மிகமகிழ்வாய் போற்றி 

79 ஓம் (4)ண்டா(3)சுரேந்த்(3) நிர்முக்த-(h)ஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிண்யை நம:
ஓம் பண்டன்விடு படைக்கெதிராய் கணைமழையைத் தான் பொழிவாளே போற்றி 

80 ஓம் கராங்குலி நகோத்பன்ன நாராயண-(3)சா(h)க்ருத்யை நம:
ஓம் தன் நகத்தால் நாரணன்பத் தவதாரம் படைத்தாளே போற்றி 80


81) ஓம் மஹாபாசு(h)பதாஸ்தாக்(3)நி-நிர்த(3)க்(4)தா(3)ஸுர ஸைனிகாயை நம:
ஓம் பாசுபதக் கணைத் தீயால் அரக்கர் படை அழித்திட்டாய் போற்றி

82) ஓம் காமேச்(h)வராஸ்த்ர நிர்த(3)க்(4)(3)-ஸப(4)ண்டாஸுர 
சூ(h)ன்யகாயை நம:
ஓம் காமேசன் கணையதனால் பண்டாஸுரனோடவன் தீமாவாம்
 தலைநகரம் சூனியகம் எரித்திட்டாளே போற்றி

83) ஓம் ப்(3)ரஹ்மோபேந்த்(3) மஹேந்த்(3)ராதி(3) தே(3)-ஸம்ஸ்துத வைப(4)வாயை நம:
ஓம் பிரமனரி இந்திரரும் தேவர்களும் தொழநின்றாளே போற்றி

84) ஓம் ஹர நேத்ராக்(3)நி ஸந்த(3)க்(4)(3) -காமஸஞ்ஜீவ நௌஷத்(4)யை நம:
ஓம் அரனெரித்த மதனுயிரைத் தருமருந்துக் கொடியானாளே போற்றி

85) ஓம் ஸ்ரீமத்(3)வாக்(3)(4) கூடைக-ஸ்வரூபமுக(2) பங்கஜாயை நம:
ஓம் சீர்மிகுந்த வாக்பவத்தின் கூடத்தைத் தன்னுடைய
 ஏருற்ற முகத்தாமரையாகக் கொண்டிட்டாளே போற்றி

86) ஓம் கண்டாத(4):கடிபர்யந்த மத்(4)யகூட ஸ்வரூபிண்யை நம:
ஓம் கண்டமுதல் இடைவரையில் காமராஜ நடுக்கூடம்
கொண்ட திரூருவானாளே போற்றி

87) ஓம் (h)க்திகூடைகதாபன்ன கட்யதோ(4)-பா(4)(3)
தா(4)ரிண்யை நம:
ஓம் குலவுமிடைக் கீழ்ப்பகுதி சக்திபீடமொன்றிட்ட தனிப்பகுதியாய்க்
கொண்டாளே போற்றி

88) ஓம் மூலமந்த்ராத்மிகாயை நம:
ஓம் மூலமாம் பெருமந்திரம் தானாகி விளங்குவாளே போற்றி

89) ஓம் மூலகூடத்ரயகலேப(3)ராயை நம:
ஓம் மூலத்தின் முக்கூடம் தன்னுடலாய்த் தான்கொண்டாளே போற்றி

90) ஓம் குலாம்ருதைக ரஸிகாயை நம:
ஓம் குலாமுதச் சுவையினில் தனியின்பம் கண்டிட்டாளே போற்றி

91) ஓம் குலஸங்கே(3)தபாலின்யை நம:
ஓம் குலமறையைக் காத்திடுவாளே போற்றி

92) ஓம் குலாங்க(3)னாயை நம:
ஓம் குலமகளாய்த் தான் திகழ்வாளே போற்றி

93) ஓம் குலாந்தஸ்தாயை நம:
ஓம் குலத்துள்ளே உறைந்திடுவாளே போற்றி

94) ஓம் கௌலின்யை நம:
ஓம் கௌலவழிபாடுறுவாளே போற்றி

95) ஓம் குலயோகி(3)ன்யை நம:
ஓம் குலப்பிறப்பாம் யோகத்தை வரச்செய்யும் அருளுடையாளே போற்றி

96) ஓம் அகுலாயை நம:
ஓம் அகுலமாம் சுழுமுனையாளே போற்றி

97) ஓம் ஸமயாந்தஸ்தாயை நம:
ஓம் சமயத்தின் நடுநிற்பாளே போற்றி

98) ஓம் ஸமயாசரதத்பராயை நம:
ஓம் ஆறாதார வழிபாட்டால் அகமகிழ்ந்திடுபவளே போற்றி

99) ஓம் மூலாதா(4)ரைக நிலயாயை நம:
ஓம் மூலாதாரத் தனியாளே போற்றி

100) ஓம் ப்(3)ரஹ்மக்(3)ரந்தி விபே(4)தி(3)ன்யை நம:
ஓம் பிரமநாடி முடிப் பொடிப்பாளே போற்றி 100


101) ஓம் மணிபூராந்தருதி(3)தாயை நம:
ஓம் மணிப்பூரகத்தில் உதிப்பாளே போற்றி

102) ஓம் விஷ்ணுக்(3)ரந்தி விபே(4)தி(3)ன்யை நம:
ஓம் மால்முடிப்பைப் பிளந்திடுவாளே போற்றி

103) ஓம் ஆக்ஞாசக்ராந்தராலஸ்தாயை நம:
ஓம் ஆக்கினைச் சக்கரத்தின் நடுவே திகழ்பவளே போற்றி

104) ஓம் ருத்(3)ரக்(3)ரந்தி விபே(4)தி(3)ன்யை நம:
ஓம் உருத்திர நாடியதன் உறுமுடிப்பை ஒடித்திடுவாளே போற்றி

105) ஓம் ஸஹஸ்ராராம்பு(3)ஜாரூடா(4)யை நம:
ஓம் ஆயிரமாம் இதழ்கொண்ட தாமரையில் வீற்றிருப்பாளே போற்றி

106) ஓம் ஸுதா(4)ஸாராபி(4)வர்ஷிண்யை நம:
ஓம் அமுதத்தைப் பெருமழையாய் அகம்புறத்தே பொழிவிப்பாளே போற்றி

107) ஓம் தடி(4)ல்லதா ஸமருச்யை நம:
ஓம் மின்னலென ஒளிர்ந்திடுவாளே போற்றி

108)  ஓம் ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதாயை நம:
ஓம் ஆறுசக்கரமேல் நிலைப்பாளே போற்றி

109) ஓம் மஹாசக்த்யை நம:
ஓம் திருவிழாவில் மிகமகிழ்வாளே போற்றி

110) ஓம் குண்டலின்யை நம:
ஓம் குண்டலமாய்ச் சுருண்டிடுவாய் போற்றி

111) ஓம் பி(3)ஸதந்து தனீயஸ்யை நம:
ஓம் தாமரையின் நூல்போல மெல்லியலாய் விளங்கிடுவாளே போற்றி

112) ஓம் (4)வான்யை நம:
ஓம் பவானியாளே போற்றி



Comments

Popular posts from this blog

Guru Charitra - Concise version - Chapters 21 & 22

Guru charitra concise version - Chapters 33 & 34!

Guru charitra Concise version chapters 27 & 28